மனிதனின் பலவீனம்
ஒரு நாள் ஒரு மனிதன்,
குயிலிடம் சொன்னான்.
'நீ மட்டும் கருப்பா இல்லைனா எவ்வளவு நல்லா இருக்கும்'
கடலிடம் சொன்னான்.
'நீ மட்டும், உப்பா இல்லைனா நல்லா இருக்கும்'
ரோஜாவிடம் சொன்னான்.
‘ உன்னிடம் முட்கள் இல்லைனா எவ்வளவு நல்லா இருக்கும்'
அப்போது அந்த மூன்றும் ஓன்று சேர்ந்து சொன்னது,
" மனிதா! உன்னிடம் மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லைனா, எவ்வளவு நல்லா இருக்கும்'
பிறரிடம் குறை காணாத மனிதன் என்றுமே அழகுதான்
0 Comments