அம்மாவின் அன்பு

ஒருமுறை  பள்ளியிலிருந்து  வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவர் இருந்தது. அந்த கவரை தன் அம்மாவிடம் மட்டும் கொடுக்க வேண்டும் என்று தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தார்.

அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்படி படித்தாள்."உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது. அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடம் இல்லை. அதனால் தயவு செய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று கூறினாள்.

பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார். எடிசனுக்கு அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராகவும், கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.

இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்து வைத்து கொண்டிருக்கும் பொழுது அவர் தன் அம்மாவிடம் பள்ளியில் இருந்து கொடுத்த கடிதம் அவர் கண்ணில் பட்டது.

அதை எடுத்து படித்து பார்த்தார்.

அதில் இப்படி எழுதி இருந்தது. " மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்" என்று எழுதி இருந்தது.

இதைப்படித்த எடிசன் மிகவும் அழுதார். பின் அவரது டைரியில் கீழ்கண்டவாறு எழுதினார். "பள்ளியிலிருந்து நிராகரிக்கப்பட்ட மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலே மாபெரும் கண்டுபிடிப்பாளரானான் ". என்று எழுதி இருந்தார்  ...

தன் பிள்ளைகள் மீதான நம்பிக்கையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும். நம்மாலும்  பல எடிசன்களை  உருவாக்க முடியும்.